Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முப்பெரும் தேவியர் பவானி  அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை

செப்டம்பர் 29, 2023 08:54

வாசுதேவநல்லூர்: தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில்  முப்பெரும் தேவியர் பவானி  அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் தெய்வங்களுக்கு புரட்டாசி மாத முப்பெரும் தேவியர் பவானி  அம்மன் ஆலயத்தில்

பூஜையை முன்னிட்டு அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அம்மாக்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று. தொடர்ந்து  காலை 10  மணி முதல் மாலை 5 மணி வரை பௌர்ணமி நாளில் சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது.

மாலை 6 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா புரட்டாசி மாத பௌர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், இளநீர், பஞ்சாமிர்தம் சந்தனம், குங்குமம் உட்பட 21 நறுமண பொருட்கள், மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும்  1008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை  பதினெட்டாம்படி கருப்பசாமி, பவானி பத்திரகாளியம்மன், மகா காளியம்மன், புற்றுக்காளி, நாகக்காளி,  சூலக்காளி, ரத்தக்காளி, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து  முப்பெரும் தேவியர் அம்மனுக்கு சந்தன காப்பு, அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8.30 மணி அளவில் 108 திருவிளக்கு பூஜை  நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பக்தி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடந்தது.  

தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்